கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 16, 2017

பதினேழில் பிறந்தவர்கள்

பதினேழில் பிறந்தவர்கள் 




நாளைக்கு ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள். சாதாரணமாக எட்டாம் எண்ணைப் பற்றி அது ஒரு துரதிர்ஷ்டமான எண் என்று ஒரு தவறான கருத்து உண்டு. அதனால் 8,17,26 தேதிகளில் பிறந்த சிலர் தங்கள் பிறந்த தேதியை குறிப்பிடவே தயங்குவார்கள். எட்டாம் எண் சனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. அதனால்தான் இந்த பயம். 

சனி என்றாலே நாம் எல்லோரும் பயந்து நடுங்குகிறோம். ஏதோ நமக்கு வருகின்ற தீமைகள் எல்லாம் அவரால்தான் வருகிறது என்று ஒரு எண்ணம். அப்படி கிடையாது. ஒருவரது ஜாதகத்தில் சனி நன்றாக அமைந்து விட்டால் அவர் செய்யும் நன்மைகள் ஏராளம். 

80களில் எண்ணை வள வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டியவர்கள் பலர் சனி உச்சனாக இருந்த 1953-1955 கால கட்டத்தில் பிறந்தவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன். அதற்கு சனி உச்சமா க இருந்தது மட்டும் காரணமல்ல, அதுவும் ஒரு காரணம். சனி உச்சமாக இல்லாவிட்டாலும் ஜாதகத்தில் பலமாக இருப்பார். அதைப் போலவே 1982 -1984 இல் பிறந்த பலர் இன்று வெளிநாடுகளில் வசிப்பதை பார்க்கலாம். சிறந்த சர்ஜன்கள் பலருக்கும் ஜாதத்தில் சனி பலமாக இருப்பார். சாதாரணமாகவே சனி பகவான் கடுமையாக உழைக்க வைப்பார். மரபுகளை மீறி புரட்சியை செய்ய வைப்பார். மதத்தில் புரட்சி செய்த,விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்த ராமானுஜருக்கு ஜாதத்தில் சனி மிகவும் பலமாக இருப்பார். 

சரி விஷயத்திற்கு வருவோம், சனியின் ஆதிக்கத்தில் வரும் எண் ஆன 8,17,26 இந்த மூன்று எண்களில் மிகவும் சிறப்பானது 17. இந்த தேதியில் பிறந்த பலர் தங்கள் துறையில் மற்றவர்களால் தொட முடியாத உயரத்தை தொட்டிருப்பார்கள். பெரிய புரட்சியாளர்களும் இந்த தேதியில் பிறந்தவர்களே. ஆனால் வெற்றியை கொஞ்சம் போராடி பெற வேண்டும். பின்னே புரட்சி என்பதை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதைப் போல ஈசியாக செய்துவிட முடியுமா? 

மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., திரைப்பட இயக்குனர் ஷங்கர், கிரிக்கெட் வீரர்களில் அணி கும்ப்ளே,அஸ்வின் ரவிச்சந்திரன் போன்றவர்கள் 17ம் தேதி பிறந்தவர்கள்.  இவர்கள் சாதனைகளை விளக்க வேண்டுமா என்ன?. இதில் ஒவ்வொருவரையும் பற்றி தனித்தனியாக பதிவுகள் எழுதலாம்.

17ம் தேதி பிறந்தவர்கள் எந்த இலட்சியத்தை மனதில் கொண்டு அதை நோக்கி பயணிக்கிறார்களோ அதை அடைவார்கள் என்பார்கள். ஆகவே உங்கள் குழந்தைகள் 17ம் தேதியில் பிறந்திருந்தால் அவர்கள் மனதில் ஒரு இலட்சியத்தை விதையுங்கள்.