கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, June 23, 2016

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி 

முருங்கை காயில் சாம்பார் செய்யலாம், பொரித்த குழம்பு செய்யலாம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கறி கூட சமைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் (இளசாக இருக்க வேண்டியது அவசியம்) - 4
காரப்பொடி - ஒன்றரை டீ ஸ்பூன் 
உப்பு -  1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க: எண்ணெய், மற்றும் கடுகு.



செய்முறை: 

முதலில் முருங்கைக்காய்களை அலம்பி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அலம்பி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை போட்டு மஞ்சள் பொடி, உப்பு, காரப்பொடி இவைகளை சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்த பிரட்டி விட வேண்டும். முருங்கைக்காய்கள் நிறம் மாறுவது வெந்ததற்கு அறிகுறி. உடனே இறக்கி விடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.   

தன் மாமியாரிடமிருந்து என் மகளும், அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் இது.



Sunday, June 19, 2016

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!   

CHOOSE THE MIDDLE PATH

CHOOSE THE MIDDLE PATH

"CHOOSE THE MIDDLE PATH" இது புத்தரின் தலையாய போதனை. இதை நாம் வாழ்க்கையில் கடை பிடிக்கிறோமோ இல்லையோ, முக்கியமான தினங்களில் கோவில்களுக்குச் செல்லும் போது அவசியம் கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு  நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை. 

இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!

இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/-  என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது. 

So moral of the story is always choose the middle path!