கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 10, 2014

ராகு காலமும் எம கண்டமும்

ராகு காலமும் எம கண்டமும் 





ஒரு முறை சூரியன் முதல் சனி வரை உள்ள கிரகங்கள்  சிவ பெருமானிடம் சென்று தாங்கள் மனிதர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு நாளில் சில நாழிகைகளை(மணித்துளிகளை) தங்களுக்கு தருமாறு வேண்டினர். சிவனும் அவர்களின் நல்ல எண்ணத்தை மதித்து ஒரு நாளில் மூன்று மணி நேரங்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கினார். அந்த மூன்று மணி நேரங்களையும் சேர்ந்தர்போல ஒரே சமயத்தில் கொடுக்காமல் காலையில் ஒரு மணி நேரம். மதியம் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று பிரித்து வழங்கினார். அது ஹோரை என்று வழங்கப்படும்! ஒவ்வொரு நாளும் அதற்குரிய ஹோரையில் துவங்கும். உதாரணமாக திங்கள் கிழமையின் முதல் ஹோரை சந்திர ஹோரை ஆகும். ஒவ்வொரு ஹோரையிலும் சில காரியங்கள் செய்வது சிறந்த பலனைத் தரும். இதை விவரித்தால்... 

சூரிய (ஞாயிறு) ஹோரையில் அரசாங்க அலுவல்களை செய்யலாம். 
சந்திர ஹோரையில் பிரயாணங்கள்,திருமண விஷயங்கள் செய்வது நலம். 
செவ்வாய் ஹோரையில் மருந்துண்ணுவதும், சிகிச்சை மேற்கொள்ளுவதும், போருக்கு செல்லுவதும், கடன் அடைப்பதும், நிலம்,வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடங்குவதும் வெற்றியைத் தரும். 
புத ஹோரையில் கல்வி, வியாபாரம் போன்ற காரியங்களை ஆற்றுவது நலம் பயக்கும். 
குரு(வியாழன்) ஹோரை எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்தது. குறிப்பாக, கோவிலுக்குச் செல்லுதல், மகான்களை தரிசித்தல், பூஜை போன்ற தெய்வீக விஷயங்களுக்கு சிறப்பானது. 
சுக்ர(வெள்ளி) ஹோரை திருமணம் பேச,திருமணம் நடத்த, நிச்சயதார்த்தம் முடிக்க,ஆபரணங்கள் வாங்க, பூன,க்ரஹ பிரவேசம் சாந்தி முஹுர்த்தம் போன்ற சுப காரியங்கள் நடத்த ஏற்றது. 
சனி ஹோரையில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அமைப்பது/இயக்குவது எண்ணெய் ஆட்டுவது போன்ற காரியங்களைச் செய்யலாம்.  

மேற்கண்ட ஏழு கிரகங்களுக்கும் கிடைத்த வரத்தை கேள்விப்பட்ட சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தங்களுக்கும் அதைப் போல  நாளில் மூன்று மணி நேரம் வேண்டும், ஆனால் அந்த மூன்று மணி நேரத்தில் மற்ற கிரகங்களைப் போல மனிதர்களுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்ய பயன் படுத்துவோம் என்று எண்ணின. அவைகளின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட இறைவன், "மற்ற கிரகங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்ய நினைத்தன, ஆனால் நீங்கள் இருவரும் கெடுதல் செய்ய விரும்புகிறீர்கள், நன்மை,தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை, ஆகவே உங்களுக்கும் ஒரு நாளில் சில மணித் துளிகளை ஒதுக்குகிறேன், ஆனால் மற்ற கிரகங்களுக்கு போல் மூன்று மணி நேரம் கிடையாது,அதில் பாதியான ஒன்றரை மணி நேரமே.." என்றார். அது முதல் தினமும் ராகுவிற்கான ஒன்றரை மணி நேரம் ரகு களம் என்றும், கேதுவிற்கான ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றும் கடைபிடிக்கப் படலாயிற்று. அந்த நேரத்தில் நல்ல செயல்கள் எதுவும் தொடங்குவது அத்தனை ஸ்லாகியமல்ல என்பது ஒரு நம்பிக்கை
என்றாலும் விருச்சிக லக்னம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கும், மகர ராசியில் ராகு இருக்க பிறந்தவர்களுக்கும் ராகு காலம் எந்த வித தீய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் அனுபவ ஜோதிட பாடம். மேலும் ரகு காலம், எம கண்டம் இரண்டிற்கும் இடையில் நல்ல ஹோரைகள் வந்து விடுவதும் அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இப்படி நல்ல ஹோரைகளால் நம்மை காக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் துவங்குகின்றன போலும்!