கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 15, 2013

ராஜா ராணி

ராஜா ராணி 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாராவின் வருகை! கை தட்டி வரவேற்கலாம்! படத்தின் மிகப் பெரிய பலம் அவர்தான்! படம் முழுவதும் பிழியப் பிழிய அழுகிறார் கிளிசரின் போட்ட சினிமா அழுகை இல்லை கண்களில் உள்ள மை கரைந்து வழியும் நிஜ அழுகை! என்றாலும் அதைப் பார்க்கும் நமக்கு எரிச்சலோ, அலுப்போ வராதது அவருக்கு கிடைத்த வெற்றிதானே!  
இரண்டு ஹீரோக்கள், இரண்டு கதா  நாயகிகள், முன்பாதியில் ஒன்று பின்பாதியில் ஒன்று என்று இரண்டு பிளாஷ்  பாக்குகள் இப்படி படமே இரண்டு பாதியாக பிரிந்து நிற்கிறது. முதல் பாதியை சத்யராஜ், நயன்தார,ஜெய் இவர்களின் திறமையும் அனுபவமும் காப்பாற்றுகின்றன. இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்த சந்தானம் மட்டும் முயலுகிறார்.  ஆர்யா கொஞ்சம் நடிக்கவும் முயற்சிக்கலாம் நஸ்ரியாவுக்கு போகப் போக நடிக்க வரும் என்று தோன்றுகிறது.
ஜீ .வீ .பிரகாஷின் இசையில் எந்த பாடலும் ஈர்க்கவில்லை. வசனம் சில இடங்களில் மட்டும் பளிச்சிடுகிறது. ஆர்யா படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். அதனாலோ என்னவோ படம் கொஞ்சம் தள்ளாடுகிறது. இந்தப் படத்தை சிலர் மௌன ராகத்தோடு ஒப்பிடுகிறார்கள். அதற்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லலாம் முக்கியமான வித்தியாசம் மௌன ராகம் காலத்தை வென்ற கிளாசிக் !

No comments:

Post a Comment