கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 29, 2012

நீதானே என் பொன் வசந்தம்!

நீதானே என் பொன் வசந்தம்!





"நான் சொல்வதெல்லாம் காதல், காதலைத் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று பிரதிக்ஞை செய்து விட்டு இந்தப் படத்தை கெளதம்  வாசுதேவ்  மேனன்  எடுத்திருப்பார் போல, படம்  முழுவதும்  காதல் காதல் காதல்!கொஞ்சம் ஓவர் டோஸ்தான். அதுவும் முன் பாதியில் காமம்தான் காதல் என்பது போல சித்தரிப்பது நியாயமா கெளதம்?

கௌதமின் எல்லா கதா நாயகர்களையும் போல இந்தப் படத்திலும் மிடில் கிளாஸ்  இன்ஜீநீயரிங் மாணவனான ஜீவா, அவரை விட அந்தஸ்தில் உயர்ந்த சமந்தாவை காதலிக்கிறார். காதலியின் உபயத்தில் விலை உயர்ந்த உடை, சொகுசுக் கார் பயணம், செல் போன், நட்சத்திர ஓட்டல் சாப்பாடு என்று அதனை சொகுசுகளையும் அனுபவிக்கிறார், காதலியின் வீட்டில் ஒருவரும் இல்லாத போது அவருடன் தனியாக இருக்கிறார். அவருடைய அண்ணன் தான் ஆசைப்பட்ட பெண்ணை அந்தஸ்து குறைவான காரணத்தால் மணக்க முடியாமல் போகும் பொழுது நிதர்சனத்தை உணரும் அவர் படிப்பும் நல்ல உத்தியோகமும் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று புரிந்து கொண்டு எம். பி. ஏ. நுழைவுத்  தேர்வுக்கு  தன்னை  தயார்  செய்து  கொள்ள  வேண்டும்  என்பதால் காதலியிடமிருந்து  விலகுவதோடு  அவளையும், "என்னையே சார்ந்திருக்காதே  ஏதாவது உருப்படியாகச் செய்" என்று  நியாயமாக  அறிவுறுத்த அதை சரியாக புரிந்து கொள்ளாத சமந்தா அவரைப் பிரிகிறார். இது இயல்பான முன் பாதி என்றால், ஜீவாவின் படிப்பும்  நல்ல  உத்தியோகமும் அவரது குடும்ப அந்தஸ்தை உயர்த்துகிறது. இந்த  கால  இடைவெளியில்(மூன்று வருடங்கள்) சுனாமி  நிவாரண  கிராமம்  ஒன்றில்  ஆசிரியையாக பணி ஆற்றச் செல்கிறார் சமந்தா
அவரைத் தேடிச் செல்லும்(நோட்:கெளதம் கதா நாயகன்) ஜீவா தன்னோடு வரும்படி சமந்தாவை அழைக்க, "உன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு இப்பொழுது  என்னை வந்து அழைக்கிறாய், இதற்க்கு  உனக்கு மூன்று வருடங்கள் ஆகியிருக்கிறது,இன்னும் மூன்று வருடங்கள் ஆகி
இருந்தால் அப்பொழுதுதான் வந்து இருப்பாயா? நீ  அழைத்தவுடன்  உன்னோடு  நான் வந்து விட வேண்டுமா எனக்கு இங்கே வேலை இருக்கிறது". என்று கூறிவிட (இங்கே  படம்  முடிந்திருந்தால்  கூட  நன்றாக  இருந்திருக்கும்)  அதில்  உள்ள  நியாயத்தை  புரிந்து  கொள்ளாமல்  அவரை விட்டு விட்டு  தன்   அண்ணியின்  தங்கையையே  மணக்க  முடிவு  செய்யும் ஜீவா, கல்யாணத்திற்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன் திருமணத்தை நிறுத்தி விட்டு(நோட் மீண்டும் கெளதம் படம்) சமந்தவோடு மீண்டும் இணைவதுதான்  சினிமாத்தனமான பின் பகுதி. 

ஜீவாவைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான படம். கல்லூரி கல்சுரல்சில்,'நீதானே என் பொன் வசந்தம்' பாடல்  பாடும்  பொழுது  அவர்  முகத்தில் தென் படும் பரவசமும் சரி இறுதியில், "ஐ ஹேட்  யூ நித்யா" என்று கூறும் பொழுது முகத்தின் இறுக்கமும் சரி சபாஷ் சொல்ல வைக்கின்றன. சமந்தா  பள்ளி மாணவியாக படு கியூட்! பின்னால் சேலையில் பரிதாபம். முன் பாதியை சுவாரஸ்யமாக கொண்டு
சென்றிருபத்தில் சந்தானத்தின் டைமிங்கான காமெடிக்கு கணிசமான பங்கு
இருக்கிறது. பிரபல  சின்னத்திரை  நடிகர்  மோகன் ராமின்  மகள்  நகைச்  சுவை நடிகையாக அறிமுகமாகி  இருக்கிறார். மனோரமா போல வர ஆசையாம். ஆல் த பெஸ்ட் !

ஜீவாவும் சமந்தாவும் பிரியும் மிக மிக்கியமான கட்டத்தில் டைட்  க்ளோசப் இல்லாவிட்டாலும், மிட் ஷாட்டவது வைத்திருக்க வேண்டாமா?
லாங் ஷாட்டிலும், ஏரியல் ஷாட்டிலும் அந்தக் காட்சியை படம் பிடித்திருப்பது...? கௌதமுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருக்கும் கெமிஸ்ட்ரி இசை ஞானியோடு இல்லை. தேர்ந்த நடிகரான ரவி
ராகவேந்தருக்கு ஏன் உணர்ச்சியே இல்லாத ஒரு இரவல் குரல்?

பாடல்கள் பல பிரமாதம். கௌதமின் மற்ற படங்களை விட இந்தப் படத்தில் வசனம் மிகச் சிறப்பாக இருக்கிறது. காமிரா துல்லியம்! படம்? ஹி! ஹி! 

இறுதியாக கெளதம் வாசுதேவ் மேனன் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்! தயவு செய்து உடல் இச்சையை காதல் என்று காட்டாதீர்கள். அதே போல
கல்யாண மேடையில்  திருமணத்தை  நிறுத்தும்  காட்சியும்  இனிமேல்  வேண்டாம்.