கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 23, 2011

யாதுமாகி நின்றாய்!
(a play by Gurukulam theatres, Written & Directed by M.B.Moorthy)

Artists: Mr.Sriram, Mrs.S.S.Malathy,Mr.M.B.Moorthy,Mrs.R.Jayanthi,MrVenkat,&Master Sharad Bhardwaj

தமிழ் நாடகங்கள் என்றால் பெரும்பாலும் துணுக்கு 
தோரணங்கள்தான் என்ற நிலையை மாற்றும்படி
அவ்வப்பொழுது நல்ல கருத்துள்ள நாடகங்களும் 
அரங்கேறுகின்றன! அவற்றில் ஒன்றுதான் குருகுலம் 
தியேட்டர்சாரின் 'யாதுமாகி நின்றாய்' நாடகம்!

குடும்பம், அலுவலகம் இரண்டையும் திறம்பட 
நிர்வகிக்கும் பெண்(பிரியா),அவளுடைய மேலதிகாரியாக 
வரும் ஆணோடு(பாஸ்கர்) கொள்ளும் நட்பால், அவளுக்கு ஏற்படும் உறவுச் சிக்கலை சற்றே மேலோட்டமாக விவரிக்கும் 
கதை. இதற்கு இணை கதையாக ஹவுஸ் வைப்(பிருந்தா)-
வேலை பார்க்கும் கணவன்(மூர்த்தி), மனைவியின் தம்பி(பாச்சு) 
என்று  மற்றொரு  குடும்பம்,  எப்பொழுதும் சண்டை போட்டுக்
கொண்டாலும்  உள்ளுக்குள்  அக்கறையும் அன்பும் கொண்ட 
இந்த குடும்பம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல 
உதவுகிறது.

மறைந்த நாடக உலக ஜாம்பவான் திரு.பூர்ணம் விசுவநாதன் 
அவர்களோடு நடித்த அனுபவம் கை கொடுக்க அதனை பேரும் 
சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ரியாவின் கணவராக 
வரும் கோகுலும், ப்ரியாவின் மேலதிகாரியாக வரும் ரமேஷும்!

பாத்திரத்தை உணர்ந்து நடிப்பது என்பது ஒரு வகை, பத்திரத்தில் 
ஒன்றி நடிப்பது ஒரு வகை, பார்வையாளர்களை பாத்திரத்தோடு 
ஒன்றச் செய்வது என்பது ஒரு வகை, இதில் மூன்றாவது வகையைச்
சேர்ந்த பண்பட்ட நடிப்பை வழங்கியுள்ள ரமேஷுக்கு சிறப்பான 
பாராட்டுகள்! கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு கிடைத்த 
வாய்ப்பை ஸ்ரீராம் சிறப்பாக பயன் படுத்திக்கொன்டுள்ளார்!
ஜெயந்திக்கும், மூர்த்திக்கும் இடையே உள்ள புரிதல், நகைச்
சுவை காட்சிகளை கலகலப்பாக்குகின்றன! பாச்சுவாக வரும் 
வெங்கட் தன்னுடைய பாடி லாங்குவேஜை இன்னும் கொஞ்சம் 
மேம் படுத்திக்கொள்ளலாம்..!

மற்றபடி எளிய காட்சிகள், இயல்பான வசனங்கள் என்று தெளிவாக
செல்லுகிறது நாடகம்! இசை இன்னும் கொஞ்சம் பவர்புல்லாக
இருந்திருக்கலாம்! அன்றைக்கு வாணி மஹால், மஹா பெரியவா
செண்டினேறி ஹாலில் ஒலி அமைப்பு சரியாக இல்லை போலும், 
என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி வசனமே காதில் 
விழவில்லை என்று புலம்பிக்கொண்டே இருந்தார்!  

யாதுமாகி நின்றாய் நாடகம் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு 
நாடகம்!