மங்காத்தா
தன்னுடைய ஐம்பதாவது படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அஜித் விரும்பியதில் தவறில்லை. அதற்காக இப்படியா? நாயகனில் தொடங்கிய anti hero சகாப்தம் இன்னும் முடிந்தபாடில்லை. நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்கிறார்
தல. படம் முழுக்க விஸ்கி ஆறாக ஓடுகிறது. அஜித் புகைக்கும் சிகரெட்டால்
படம் பார்க்கும் நமக்கு தொண்டை கமருகிறது. கெட்டவனாக நன்றாகதான் நடித்திருக்கிறார். பின்பாதியில் ஒலிக்கும் பீப் பீப் ஒலிகள் படத்தில்
இறைந்து கிடக்கும் கெட்ட வார்த்தைகளை அடையாளம் காட்டுகின்றன.
அந்த கிளைமாக்ஸ்.... கொடுமைடா சாமி!
பிரேம்ஜி அண்ணனுடைய படத்தில் மட்டும்தான் தன் நகைச்சுவை திறமையை கட்டுவது என்று முடிவு கட்டியிருக்கிறார் போலிருக்கிறது!
சரோஜா பாணியிலேயே இருந்தாலும் படத்தின் முன் பாதி இவரால் கலகலப்பாக செல்கிறது.
அளந்து நடிக்கும் த்ரிஷா, அளவில்லாமல் கவர்ச்சி காட்ட லக்ஷ்மி ராய்,
இரண்டே காட்சிகளில் வந்து போகும் அழகான அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா என்று நான்கு நாயகிகள் இருந்தும் ஒருவர்க்கும் முக்கியத்துவம் கிடையாது.
துணை வில்லனாக ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் வேறு!
பாடல்களில் கோட்டை விட்டாலும் பின்னணியில் திறமை காட்டியிருக்கிறார்
யுவன் ஷங்கர் ராஜா.
கவர்ச்சியும் திறமையும் கொண்ட கதாநாயகிகள், தேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்
என்று அத்தனயயும் அமைந்திருந்தும் இப்படியா ஒரு படத்தை எடுக்க வேண்டும்?
வெங்கட் பிரபுவிற்கு கிரிகெட் மீது அலாதி ப்ரியம் என்பது புரிகிறது. ஆனால் போலீஸ்காரர்கள் மீது என்ன கோபம்? அவருடைய அடுத்த படத்திலாவது கிரிகெட்டையும் காவலர்களை வில்லனாக சித்தரிப்பதையும் விட்டு விட்டு வேறு கதையை யோசிப்பது அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.
சாதாரணமாக சோஷியல் கமிட்மென்ட் இல்லாத இப்படிப்பட்ட படங்களைப்
பார்த்தால் எனக்கு மிகவும் கோபம் வரும். ஆனால் இந்த படத்தை பார்த்து எனக்கு கோபமோ வருத்தமோ வரவில்லை காரணம் சர்கஸில் பபூன் செய்யும் சேட்டைகள் அருவருப்பாக இருந்தாலும் சிரிப்போம் அல்லது பேசாமல்
இருந்து விடுவோம் அதற்காக கோபமா படுவோம்? உங்களிடம் நேரமும், பணமும், அவற்றை செலவழிக்க மனமும் இருந்தால்
மங்காத்தவுக்கு செல்லலாம்.
No comments:
Post a Comment