கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 16, 2011

women's day celebration by Sri Vigneswara ladies club - Ramapuram

பெண்கள் தின கொண்டாட்டம் - ஸ்ரீ விக்னேஷ்வர லேடீஸ் கிளப்

உலகம் முழுவதும் அகில உலக பெண்கள் தினத்தை மார்ச்  8 அன்றே கொண்டாடி விட்டாலும் ராமாபுரம் பெண்கள்  மட்டும் மார்ச் 11 மற்றும் 12 மகளிர் தினத்தை கொண்டாடினர்.  அந்த  இரு நாட்களும் வார இறுதியாக இருந்தது ஒரு முக்கிய காரணம். 

ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப் தனது மூன்றாம் ஆண்டு விழாவையும்
மகளிர் தினத்தையும்  சேர்த்து ஒரே விழாவாக கொண்டாடினார்கள். 
சனிக்கிழமை மதியம்  ஒன்று   முப்பதுக்கு  விழாவிற்கு  வருகை  தந்திருந்த பெண்கள் அணைவருக்குமான விளையாட்டுப் போட்டிகளோடு
கொண்டாட்டம் துவங்கியது.

முதல் விளையாட்டான musical box ஐ  சுமதி  நடத்தினார்.  இதில்  முதல்  இடத்தை ஜெயஸ்ரீ பிடித்தார், இரண்டு மூன்றாம் இடங்களை முறையே 
சரோஜாவும் ஆனந்தியும் கைப்பற்றினார்கள். 

இரெண்டாம் விளையாட்டான  அப்செர்வேஷன்  மற்றும்  மெமரி  விளையாட்டு  திருமதி. லக்ஷ்மி சாரங்கபானியால் நடத்தப்பட்டது. இதில் அத்தனை உறுப்பினர்களும் மிகுந்த  ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். 
அனால் கலந்து கொண்ட  மற்றவர்களைவிட  தனக்கு கவனிக்கும் திறனும்  ஞாபக  சக்தியும் அதிகம்    என்று  முதல்  இடத்தை  பிடித்ததின்  மூலம்  திருமதி.  மாலதி நிரூபித்தார்.  அவருக்கு அடுத்த இரு இடங்களை  திருமதி. பத்மஜாவும், திருமதி லீலாவும் பிடித்தனர்.       

அடுத்ததாக சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூடைக்குள் 
பிளாஸ்டிக் பந்துகளை குறிபார்த்து எறியும் விளையாட்டு, இதில் ஒன்பது பந்துகளை குறி தவறாமல் கூடைக்குள் போட்டு முதல் இடத்தை  திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரன் பிடித்தார், ஏழு பந்துகளை கூடைக்குள் போட்டு இரண்டாம் இடத்தை திருமதி.ராணியும் திருமதி.லீலாவும் பிடித்தனர், மூன்றாம் இடத்தில் அபூர்வ கிளப்ஐ சேர்ந்த திருமதி. ராதா முகுந்தன்... சம்பந்தப்படவர்களின் வீட்டில் வாக்கு வாதங்கள் வரும் பொழுது அவர்களின் கணவர்கள் சற்று தள்ளி நிற்பது நல்லது..

ஒருவாறு விளையாட்டெல்லாம் முடிந்த பிறகு, திருமதி  நித்யா  ரவீந்தர்  வருகை தர, குறிப்பிட்ட நேரத்தில் விழா துவங்கியது. திருமதி.சுந்தரி இறை 
வணக்கம் பாட,சங்க தலைவி திருமதி சியாமளா வெங்கடராமன் வரவேற்புரை 
வழங்கினார்.

தனது உரையில் திருமதி சியாமளா  அவர்கள்  விக்னேஸ்வரா  லேடீஸ் கிளப் கே.ஜி.வகுப்பில் இருக்கும் சிறு குழந்தை என்றார், அனால் நிகழ்சிகள் நடந்த விதமோ கல்லூரி மாணவிகளின் இளமைக்கு சவால் 
விடுவது போல இருந்தது.  கலை  நிகழ்சிகளில்  இடம் பெற்ற       சங்க உறுப்பினர்களின் கோலாட்டம்,மற்றும் நாடகம், அதோடு இளம்  உறுப்பினராகிய குமரி சுகன்யாவின் நடனம் என்ற எல்லாமே  பார்வைக்கு 
விருந்தளித்தன.  

இதன் பிறகு தன்  சிறப்புரையில்   நிகழ்சிகளை   பாரட்டிப்பேசிய  திருமதி நித்யா, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை  வழங்கினர். அதன் பிறகு திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் நன்றி 
உரை கூற விழாவில் கலந்துகொண்ட  அனைவரும்  சேர்ந்து தேசிய  கீதம்  பாட  விழா  இனிதே முடிந்தது.                   
                        
இதோடு மட்டுமல்லாமல் பேஷன் ஜுவெல்லரி, பூஜா சாமான்கள், ஸ்நாக்ஸ், 
போன்றவற்றுக்கான சிறு விற்பனை கூடமும் அமைக்கப்பட்டிருந்தது 
எல்லோரையும் கவர்ந்தது. மொத்தத்தில்  உற்சாகமான  ஒரு  நாளாக  அமைந்தது விக்னேஸ்வரா லேடீஸ்  கிளப்இன் மகளிர் தின கொண்டாட்டம்!       
           

No comments:

Post a Comment