கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 3, 2010

navrathri the unique festival!

சென்னை நவராத்ரியை வரவேற்க தயாராகிவிட்டது! 

 மயிலாப்பூர் மாட வீதியில் குவிந்து கிடக்கும் பொம்மைகள், அலங்கார பொருள்கள்,





கிரி ட்ரேடிங்கில் அடுக்க பட்டிருக்கும் நவராத்திரி கிப்ட் சாமான்கள் எல்லாமே நவராத்ரிக்கு நாங்கள் ரெடி என்கின்றன.
  
நவராத்திரி...மிகச்சிறப்பான வித்தியாசமான  ஒரு பண்டிகை! நாம் கொண்டாடும் பல பண்டிகைகள் 
சமயம் சார்ந்ததாகத்தான் இருக்கும். பூஜை நோன்பு போன்றவைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படும். தீபாவளி, ஹோலி  (வட இந்தியாவில்) போன்று கொண்டாட்டங்களுக்கு 
முன்னுரிமை அளிக்கும் பண்டிகைகள் குறைவுதான். ஜன்மாஷ்டமியில் தாண்டியா  போன்ற கொண்டாட்டங்களுக்கு ஓரளவிற்கு 
இடம் இருக்கிறது அதுவும் வட இந்தியாவில் மட்டும். 
மற்றபடி இவை எல்லாவற்றிலுமே முக்கிய இடம் வகிப்பது உபவாசம்,விரதம்,மற்றும் பூஜை இவைகளே.  
ஆனால் நவராத்ரியோ தேவி மகாத்மியம்,  லலிதாசஹஸ்ரநாம  பாராயணம் என்று ஒரு பக்கம் பக்தி , கொலு வைப்பதில் வெளிப்படும் கலை மற்றும் அழகுணர்ச்சி, சுண்டல் 
போன்ற பிரசாதங்கள் தயாரிப்பதில் வெளிப்படும் சமையல் திறமை, மறந்தே போய் விட்ட பாடல்களை நினைவு படுத்திக்கொண்டு சூப்பர் சிங்கர் என்று பேர் வாங்கும் ஆப்போர்ச்சுநிட்டி என்று பன்முக பண்டிகை இது ஒன்றுதான்  have a wonderful navratri!