சமீப காலங்களில் அசுர வளர்ச்சி கண்டுள்ள புறநகர் பகுதிகளுள் ராமாபுரம்மும் ஒன்று இருந்தாலும் நவீன ஆடைகள் வாங்க வேண்டுமென்றால் தி.நகர்தான்
சென்றாக வேண்டும். இனி அந்த அலைச்சல், கும்பலில் தள்ளு முள்ளு போன்றவைகளை தவிர்த்துவிட்டு ராமபுரத்திலேயே நிம்மதியாக தனிப்பட்ட கவனிப்போடு ஷாபிங் செய்யல்லாம். ராமாபுரம் காமராஜர் சாலையில் "ஸ்ரின்காரிகா" என்ற பெயரோடு தொடங்க பட்டிருக்கும் பூடிக் இல் பெண்களுக்கு தேவையான புடவை,சுடிதார்,குர்தி போன்ற எல்லா விதமான துணி ரகங்களும் அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை நமக்கு பொறுமையாக பிரித்து காண்பித்து விளக்குகிறார் அதன் உரிமையாளர் திருமதி பிட்சுலக்ஷ்மி.
பட்ட படிப்பை முடித்து விட்டு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய பிட்சுலக்ஷ்மி ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்காக செலவிடும் தன் திறமையையும் உழைப்பையும் தனக்கே செலவிட்டு உழைப்பாளி என்பதிலிருந்து
முதலாளி என்னும் நிலைக்கு உய்ரந்ததாக கூறுகிறார்.
திறமையும், எளிமையும், சுறுசுறுப்பும் கொண்டிறுக்கும் இவர் நடிகர் டெல்லி கணேஷின் மகள்!.
No comments:
Post a Comment